சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு, கடந்த 14 நாட்களுக்கு பயணித்தவர்கள், இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, இன்று முதல் சில நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
All Stories
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என கொவிட் 19 தடுப்புக்கான தேசிய நிலையம் அறிவித்துள்ளது.
டெல்டா திரிபு வைரஸ் பரவலுடன் கொவிட் 19 நான்காம் அலை மிக வேகமாக ஆரம்பிக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக போர்த்துக்கல் அச்சம் வௌியிட்டுள்ளது.
இலங்கைக்கு வருகைத்தரும் வௌிநாட்டவர்கள் மற்றும் வௌிநாட்டவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிகள் வௌியிடப்பட்டுள்ளன.
உலகின் மிகப் பெரிய பிசிஆர் பரிசோதனைக் கூடத்தை டுபாய் அதன் விமான நிலையத்தில் நிறுவியுள்ளது.
இரண்டாம் நுழைவாயிலுக்கு அண்மித்து 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாய்வுக்கூடம் திறக்கப்படவுள்ளது
உலக சுகாதார தாபனத்தின் புதிய தரத்திற்கமைய நவீன உபகரணங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வாய்வுக்கூடத்தில் ஒரு நாளைக்கு 100,000 இலட்சம் மாதிரிகளை பரிசோதனை செய்து சில மணி நேரங்களில் முடிவுகளை வழங்கக்கூடிய வசதிகள் காணப்படுகிறது என டுபாய் விமான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டுபாய் விமான நிலையம் அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து திறக்கப்படவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தது.
மேலும் குறித்த ஆய்வுகூடத்தில் நேர்எதிர் மற்றும் நேர்மறை அழுத்த அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அவை நேரடியாக அரச அறிவிப்பு தளங்களுடன் தொடர்புபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாத்துறைக்கு அப்பால் உலகின் மிக பரப்பபரப்பான வர்த்தக போக்குவரத்து மையமாக காணப்படும் டுபாய் விமானநிலையத்தை பாதுகாப்பான போக்குவரத்துக்கு உகந்ததாகவும் சுகாதார வழிமுறைகளுக்கு உகந்ததாகவும் மாற்றியமைக்கபபடுவதே நோக்கம் என விமான நிலையத் தலைவர் ஷீக் அஹமட் பின் ஷஹீட் அல் மக்டோம் தெரிவித்தார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் ஒன்லைன் ஊடாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடவுள்ள பிரஜைகளுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்க தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளின் சுங்கச் சட்டங்களுக்கமைய இந்தியர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 100,000 இந்திய ரூபா (Dh4,945) பெறுமதியான தங்க நகைகளை தம்மோடு எடுத்துச் செல்ல முடியும்.
மலபார் குழுமத்தின் தலைவர் எம் பி அஹ்மட் வழங்கிய தகவல்களுக்கமைய, தெற்காசிய சுங்கச் சட்டங்களுக்கமைய, ஒரு வருடங்களுக்கு மேல் வௌிநாட்டில் தங்கியிருக்கும் ஆண் ஒருவர் 50,000 இந்திய ரூபா பெறுமதியான தங்க நகைகளை தம்மோடு கொண்டு கொண்டு செல்ல முடியும். பெண் பயணி 100,000 இந்திய ரூபா (Dh4,945) தங்க நகை நகைகளை இந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியும்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கிட்டத்திட்ட 3.5 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் தங்கத்திற்கு பிரபலமான 'தங்க நகரம்' என்றழைக்கப்படும் டுபாயில் தங்க நகைகளை கொள்வனவு செய்யவே விரும்புகின்றனர். மேலும் இந்தியாவில் இருந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் சுற்றலாப்பிரயாணிகளாக ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் போது தங்கம் வாங்கவென்றே டுபாய் செல்கின்றனர்.
உலகின் மிகப் பெரிய தங்க சந்தைகளில் ஒன்றான இந்தியா, உலகில் முன்னணி தங்க மையமாக தன்னை மாற்றுவதற்காக பெறுமதியான உலோகங்களிலான நகைகள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட ஆபரணங்களுக்கான கட்டாய அடையாளத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மியன்மார் பணிப்பெண் ஒருவரை, பட்டினியினிட்டு சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில், குற்றவாளியாக காணப்பட்ட சிங்கப்பூர் பெண் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் தொடக்கம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதி வரை வௌிக்கள பணிகள் அனைத்துக்கும் பஹ்ரைன் அரசு தடை விதித்துள்ளது.
வௌிநாடுகளில் உள்ளவர்கள் அங்கிருந்து புதிய வேலைகளை தெரிவு செய்யும் நோக்கில் நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது கவனிக்க வேண்டிய விடயங்களை அங்குள்ள நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய இப்பதிவை நாம் எமது இணையதளத்தில் பகிர்ந்துள்ளோம்!