சமிந்துகம கரையோர பிரதேசத்தில் கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வௌிநாடு செல்லும் நோக்கில் தங்கியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
All Stories
இலங்கையில் இருந்து விமான பயணிகள் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி வரை துபாய், குவைத், இத்தாலி, மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் காரணமாக வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லுதல் 2019 இன் 203,087 இலிருந்து 2020 இல் 53,713 இற்கு 73.6 சதவீதத்தினால் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் சடலம் நேற்று (09) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று 1,895 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுறுதியாகியுள்ளது.
2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம், துஷாரியை இலங்கையில் விட்டுவிட்டு செளதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண் உதவியாளராகச் செல்லும்போது துஷாரிக்கு 16 வயதிருக்கும்.
வெளிநாட்டிலிருந்து ஊழியர்களையும் சுற்றுலா பயணிகளையும் நாட்டுக்கு அழைக்கும் போது ஒரு விமான பயணத்திற்கான பரிந்துரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நோன்புப் பெருநாள் விடுமுறைக் காலத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜெடாவில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் சில தினங்களுக்கு மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ள நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக எங்கு பதிவுகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான அறிவித்தலை பணியகம் வெளியிட்டுள்ளது.
தமது நாட்டுக்கு வருகைத் தரும் இலங்கை உட்பட 8 நாடுகளின் பிரஜைகள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த பிரான்ஸ் உள்விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜப்பானில் தொழில்நுட்பம்சார் தொழில்வாய்ப்புக்களுக்கு தகுதிவாய்ந்த இலங்கையர்களை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பதிவு செய்யப்பட்ட வௌிநாட்டு முகவர் நிலையங்களுக்கு அனுமதி வழங்க இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்துள்ளது.
குறித்த துறையில் துறைசார் தகுதியுடைய ஒருவரை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தகுதிவாய்ந்தவரிடமிருந்து 350,000 ரூபா வரை அறவிட முடியும் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த தொகைக்கு மேலதிகமாக பணம் அறவிடுவிடுவது சட்டவிரோதமானது என்றும் அவ்வாறு அதிக பணம் அறவிடும் முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என்றும் பணியகம் எச்சரித்துள்ளது.
ஜப்பானின் உள்ள தொழில்வாய்ப்புகளுக்கு தகுதியானவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி பெற்ற முகவர்களின் பெயர் விபரங்களை www.slbfe.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும்.
அதிக பணம் அறிவிட முயலும் முகவர் நிலையங்கள் தொடர்பான முறைப்பாடுகளை பணியகத்தின் விசாரணை பிரிவின் 0112-864118 அல்லது 0112-864241 என்ற தொலைபேசி இலக்கங்களூடாக முறைப்பாடு செய்ய முடியும் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான காரியாலயம் நாளையும் (27) நாளை மறுதினமும் (28) மூடப்படவுள்ளது.