நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளருக்கு ரூபா 50,000 நிதியுதவி?

நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளருக்கு ரூபா 50,000 நிதியுதவி?

வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 50,000 ரூபா உதவித் தொகை வழங்குதாக இணையதளங்களில் வௌியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியாக 50,000 ரூபா பணம் வழங்கப்படுவதாக யுடியுப் ஊடாக செய்தி பரப்பப்படுகிறது. இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு வௌிநாடு சென்று தொழில் புரிந்து வரும் நிலையில் கொவிட் தொற்று பரவலினால் மீள நாடு திரும்பும் இலங்கையர்களின் தகவல்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மையங்களில் இருந்து பெறப்படுகிறது.

அத்தகவல்களை அடிப்படையாக கொண்டு சுயதொழிலை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு தலா 50,000 ரூபா வீதம் வழங்கப்படுகிறது என்று அந்த யுடிப் செனலில் கூறப்படுகிறது. அத்ததகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று பணியகம் அதன் முகப்புத்தகத்தில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image