பெந்தோட்டை எகோ சர்வ் ஹோட்டலில் நடத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
All Stories
ஐக்கிய அரபு இராச்சியத்துடன தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நடவடிக்கை முன்னெடுக்க தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜப்பான் குடிவரவு தடுப்பு முகாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயது இலங்கை பெண் உயிரழந்துள்ளார்.
''நாடுதிரும்பும் இலங்கையர்கள் தாம் வாழ்ந்த நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால், அவர்கள் 14 நாள் கட்டாய தனிமைக்காக விடுதிகளுக்கோ, நிலையங்களுக்கோ அனுப்பப்படக்கூடாது. அவர்களது சொந்த வீடுகளில் சுயதனிமைக்கு அனுமதிக்கப்பட வேண்டும். அரசுக்கு என் ஆலோசனை''
வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகளை சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது.
அதற்கமைய, அனுமதிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ஒருவர் 14 நாட்களின் பின்னர் உரிய பயண அனுமதிகளை பெற்ற பின்னரே நாட்டுக்கு வர முடியும். அவ்வாறு வருபவர் நாட்டுக்கு வருகைத் தந்த முதலாவது நாள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்நபர் தொடர்ந்து அத்தனியார் விடுதியில் 7 நாட்கள் தங்க வைக்கப்படுவார்.
அவ்வாறு அவர் தங்கியிருக்கும் 7 நாட்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அனுமதியிருந்தபோதிலும் எங்கும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. 7வது நாள் மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்றில்லையென உறுதிப்படுத்தப்படுவாராயின் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுவார்.
இதேவேளை, தடுப்பூசி பெறாத நிலையில் நாடு திரும்புபவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள். இவர்களுக்கு முதலாவது நாள், 11வது நாள் மற்றும் 14வது நாள் என்பவற்றில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையில் தொற்றில்லையென உறுதிப்படுத்தப்பட்டால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இந்நிலையில் சுற்றுலாப்பயணியொருவர் 3 தினங்களுக்கு மாத்திரமே நாட்டில் தங்கியிருப்பாயின் வௌியில் செல்வதாயிருந்தால் மட்டுமே பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
போலி வீசாக்களை பயன்படுத்தி ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு செல்ல முற்பட்ட இருவரை குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் நேற்று (11) கைது செய்தனர்.
ஜப்பானில் இலவசமாக தொழில்வாய்ப்பை பெறுவது தொடர்பிலான தௌிவுபடுத்தல் நிகழ்வொன்று எதிர்வரும் 20ம் திகதி வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் செயற்றிறன் மிக்க திட்டத்தை செயற்படுத்த அரசு தவறினால் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து செயற்பட எமது கட்சி தயாராகவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வெலிவேரிய, நெதுன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த சுப்புன் ஹிருண பெரேரா என்ற 32 வயது நபரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா பிரதேசசபை உறுப்பினரும் ஆசிரியருமான சச்சினி செவ்வந்தி செனவிரத்னவின் கணவரான சுப்புன் ஒரு குழந்தையின் தந்தையாவார்.
சடலத்தை இலங்கை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த குவைத் அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன் வௌிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கான தடை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
உள்ளூர் செய்திகளுக்கமைய மாலை 5.00 மணி தொடக்கம் அதிகாலை 5.00 மணிவரை இவ்வூரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும். இந்நடைமுறையானது எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 8ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நாட்டு பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படையின் உதவியுடன் இவ்வூரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவ்வூரடங்கு நடைமுறையில் இருக்கும் சமயத்தில் பள்ளிவாசலுக்கு நடந்து செல்ல முடியும். இது தவிர மருந்தகங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சந்தை போன்ற நாளாந்த நடவடிக்கைகளுக்கு செல்வதற்கான அனுமதி ங்கபபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஊரடங்கு நடைமுறையில் இல்லாத பகல் நேரங்களில் உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் என்பவற்றுக்கு நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவுகளை வீடுகளுக்கு அழைப்பித்துக்கொள்ளவும் வாகனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு பயணிகள் மட்டுமே மோட்டார் வாகனத்தில் பயணிக்க முடியும். பொது மக்கள் அமர்ந்திருக்கக்கூடிய பொதுவிடங்கள் மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குவைத்துக்கான இலங்கை தூதரகத்தின் உதவியுடன் தற்காலிக பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் நிமித்தம் சென்று பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான 266 இலங்கையர்கள் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விசேட விமானமொன்றில் இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.