All Stories
வௌிநாடுகளில் பணியாற்றிய நிலையில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுக் கடிதம் மற்றும் தொழில்வழங்குநர்களினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை என்பன அவரவர் குடும்ப உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டது என்று வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரித்தானிய குடிமக்கள், குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் தற்போது அங்கு வசிக்கும் இலங்கையர்களை தவிர வேறெவருக்கும் பிரித்தானியா செல்வதற்கு 8ம் திகதிக்குப் பின்னர் அனுமதிக்கப்பட மாட்டாது என்று ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொவிட் 19 தொற்று பரவல் அதிகமாக உள்ள சிவப்பு பட்டியல் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இலங்கை உட்பட ஐந்து தெற்காசிய நாடுகளில் இருந்து பயணிகள் தமது நாட்டுக்குள் நுழைவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.
இலங்கை உட்பட 7 நாடுகளில் இருந்து பயணிகள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கான தடையை எதிர்வரும் ஜூன் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ஹாரி ரோக் நேற்று (16) அறிவித்துள்ளார்.
கடந்த 14 நாட்கள் வியட்னாமுக்கு சென்ற பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க தற்காலிக தடை விதித்துள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து எழுந்துள்ள கண்டனங்களையடுத்து, அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தஞ்சங்கோருவோரை நாடு கடத்துவதை இலகுவாக்குவதற்கான சட்டமூலமொன்று கடந்த செவ்வாய்கிழமை நீக்கிக்கொண்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை உட்பட 5 நாடுகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்காக, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும், இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.
நாளை (21) தொடக்கம் எதிர்வரும் 31ம் திகதி வரை இலங்கைக்குள் சர்வதேச விமானங்கள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானநிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு கொரியாவுக்கான தொழில்வாய்ப்புக்கு தெரிவான 3,500 இற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள், தொழில்வாய்ப்புக்காக அந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் இலங்கையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் பயணிகள் விமான சேவை மீள ஆரம்பமாகவுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொருத்தமான காப்புறுதி திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தொழில் அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.