அனைத்து வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

அனைத்து வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

இலங்கையில் தற்போது வௌிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நாளை (08) தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ம் திகதி வரையான ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய வௌிநாட்டவர்கள் கீழ்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் செப்டெம்பர் மாதம் 7ம் திகதிக்கு முன்னர் https://eservices.immigration.gov.lk/vs என்ற இணையதளத்தில் பிரவேசித்து சம்பந்தப்பட்ட விசா கட்டணத்தை செலுத்தவும் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேற்கூறிய காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் செப்டெம்பர் 7 அல்லது அதற்கு முன்னர் அவர்களின் விசா கட்டணத்தை விமான நிலையத்தில் அல்லது பத்தரமுல்லாவில் உள்ள தலைமை அலுவலகத்திற்குச் சென்று செலுத்தி சேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும்.

குடியுரிமை வீசா கட்டணம் வைத்திருப்போர் கவனத்திற்கு

அதன்படி, ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 7 வரை விசா செல்லுபடியாகும் கால நீடிப்பு அனைத்து குடியுரிமை விசாதாரர்களுக்கும் பொருந்தும்.

மேற்கூறப்பட்ட திகதிக்கு முன்பாக தமது குடியுரிமை வீசாக் காலத்தை நீடிக்க கிழமை நாட்களில் 070 710 1050 இலக்கத்துடன் குடிவரவு குடியகழ்வு திணைக்கள தலைமையத்தை தொடர்புகொண்டு உரிய வீசா கட்டணத்தை செலுத்தி ஏனைய செயற்பாடுகளை முன்டெுக்க நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image