பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 3ஆயிரத்து 250 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தொழில் அமைச்சில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
All Stories
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள், விளக்கம்கோரல் என்பனவற்றுக்கு, அரச நிறுவனங்களின் பதிலளிப்புகள் தாமதமாவதைத் தவிர்ப்பதற்காக, பொது நிர்வாக அமைச்சினால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கும் போது பல்வேறு காரணங்களினால் வாய்ப்பு பெறாத பட்டதாரிகளுடைய பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச நிருவாக, உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அரச சேவை சுமை என அரசியல்வாதிகள் கூறுவதற்கான காரணத்தை தொழிற்சங்கம் ஒன்று வௌியிட்டுள்ளது.
அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பயிற்சிபெற்ற தாதியர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தமது பணிகளைத் தொடங்குவதற்குத் தயாராக உள்ளனர் என வௌிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொழில் ரீதியில் செயல்படும் முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
தொழில் திணைக்களத்திற்கு கிடைத்துள்ள தொழிலாளர் பிணக்குகளை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் உடனடி விசாரணையை நடத்தவும், அது குறித்து, தொழில் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் விளக்கம் கோரவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு மேல் நீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய அரச நிறுவனங்களிடம் இருந்து இரண்டரை சதவீத தாமதக் கட்டணம் வசூலிக்க தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையில் பெற்றோலிய வணிகத்தில் ஈடுபடுவதற்கு விருப்பம் அடங்கிய முன்மொழிவுகளை சில வெளிநாட்டு நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
இணக்கப்பாட்டின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie J. Chung) தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் தற்போது எதிர்நோக்கும் முக்கிய பல பிரச்சினைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.