அரசாங்கத்தை மாற்றுவதற்கு இன்னுமொரு போராட்டம் நடத்த முயற்சித்தால் நான் அதற்கு இடமளிக்கமாட்டேன். இராணுவம் பயன்படுத்தப்படும். அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்படும். கடந்தமுறையைப் போன்று செய்ய இடமளிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
All Stories
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் மூத்த தொழிற்சங்கவாதியுமான முத்து சிவலிங்கம் தனது 79வது வயதில் காலாமானார்.
மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஐ.நா அதிகாரிகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துரையாடியுள்ளது.
ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மேலும் தாமதமாகக்கூடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இலகுவான ஆடைகளை அணிந்து அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு அறிக்கையிடுவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியைகள் சேலைக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து நேற்று (21) பாடசாலைக்கு வருகை தந்தமை தொடர்பான புகைப்படங்கள் சமூவளைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி ஜெனீவாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள C190 தொழில் உரிமை சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியைகள் பலர் நேற்று இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகைத்தந்தமை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தஇன்று நாடாளுமன்றில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு சேவைக்கு நாற்பது பேர் கொண்ட குழுவை ஜூலை முதல் ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பாலியல் தொழிலுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
சேலை அணியாமல் சாதாரண ஆடையில் நேற்று பாடசாலைக்கு சமூகமளித்த சில ஆசிரியைகளுக்கு எதிராக கல்வி அமைச்சரின் ஊடாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக்கூறி சமூகவலைத்தளங்கள் மூலம் விளம்பரம்செய்து, நேர்முகத்தேர்வு நடத்திய மோசடியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.