அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவித்தலை பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
கட்டணம் செலுத்தத் தவறிய பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் அடுத்த மாதம் முதல் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் உயிரிழந்தவரின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வியமைச்சும் மாகாண சபையும் இணைந்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த வேலை நிலையத்தில் 05 வருட சேவையை நிறைவு செய்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் ஜனவரி 1, 2023 முதல் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம் நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் கூடியது.
பாடசாலைகளை அண்மித்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
2021 க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்குப் பின்னர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதிபெறும் மாணவர்கள் இன்று முதல், அவர்கள் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யலாமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.