அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இருந்தே செயற்பாடுகளுடன் கூடிய ஆங்கிலம் பேசும் பயிற்சி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
All Stories
அடுத்த வாரம் முதல் அரச உத்தியோகத்தர்கள் நிறுவன கொள்கைகளுக்கு அமைவாக நிர்ணயிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹெரன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இன்று நாடாளுமன்றில் கருத்து வௌியிட்டார்.
மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துள்ள அனைத்து அடக்கு முறைக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்ட தொழில் சங்க நடவடிக்கை அடிப்படையில் மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்துடனான கலந்துராயாடலில் தீர்வுகள் பல எட்டப்பட்டுள்ளன.
ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொவிட்-19 காலத்தில் வெளியிடப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான ஆடை தொடர்பான சுற்றறிக்கையை இரத்துச் செய்ய அவசியமான நடவடிக்கை அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கை டெலிகொம் நிறுவனத்தினை விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று அனைத்து நிறுவனத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து அடையாள போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளன.
எதிர்காலத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆடை தொடர்பில் இதுவரை கொள்கை ரீதியான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றுநிருபத்தினூடாக ஆசிரியர்களுக்கான ஆடை கட்டாயமாக்கப்படுமாக இருந்தால், அவர்களுக்கு ஆடைக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.