மக்கள் போராட்டத்தில் பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் காவல்துறையின் முயற்சியை முறியடிப்போம் என சுதந்திர ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தற்போதைய அராசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்களை பொலிசார் கைது செய்து அச்சுறுத்திய இரண்டு சம்பவங்கள் தொடர்பாகச் சுதந்திர ஊடகம் இயக்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதுடன் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டாமெனப் பொலிஸ்மா அதிபர் மற்றும் அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்கின்றது.
இது குறித்து சுதந்திர ஊடகவியலாளர் சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
உலக ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வரிசைப்படுத்தலில் இலங்கை மிக வேகமாக பின்நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 6ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் அரசுக்கெதிராக கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கொண்டுள்ள வெளிநாட்டு நாணயத்தில், தற்பொழுது பயன்படுத்தக்கூடிய தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்திருப்பதாக நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்படவுள்ளன.
நாடுதழுவிய ரீதியில் நாளை (06) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு (நிர்வாக முடக்கல்) ஆததரவளிப்பதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இன்று வழமைபோன்று சேவைகள் இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டாதிருப்பின் எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளுக்கு போதிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சமூகமளிக்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.