பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிபர் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை!

பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிபர் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை!

பரீட்சைக் கடமைகளை ஈடுபட்டுள்ள அதிபர் ஆசிரியர்களுக்கு வழங்கும் இணைப்புக் கொடுப்பனவை அதிகரிக்க பரீட்சை ஆணையாளர் நாயகம் இணக்கம் தெரிவித்துள்ளார் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தனது முகப்புத்தகத்தில் தகவல் வௌியிட்டுள்ளது.

இன்று (25) பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துடனான கலந்துரையாடலின் போது இவ்விணக்கப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலையேற்றம் உற்பட அனைத்து நெருக்கடிகளையும் கருத்திற்கொண்டு பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க பரீட்சை ஆணையாளர் நாயகம் இணங்கியுள்ளார் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்ட அதிபர் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்காமைக்கு ஆசிரியர் சங்கம் கண்டனத்தை வௌியிட்டதையடுத்து எதிர்காரத்தில் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image