'குரு செத்த' கடன் திட்டத்திற்கான வட்டி வீதம் அதிகரிப்பு!

'குரு செத்த' கடன் திட்டத்திற்கான வட்டி வீதம் அதிகரிப்பு!

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் “குரு செத்த” கடன் திட்டத்திற்கான வட்டி வீதம் 15.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரையில் 9.5 வீதமாக இருந்த வட்டிவீதம் தற்போது 15.5 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வங்கிக் கிளைகளில் இருந்து தமக்கு கடிதம் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வங்கித் தலைமையகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தி்ன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 9.5% உடன் கடன் வசதியை அனுமதிக்கும் போது வங்கி 40% கடன் வரம்பை கருத்தில் கொண்டது. வட்டியை 15.5% ஆக உயர்த்தினால், 40% கடன் வரம்பு மீறப்படும்.

2021 வங்கி ஆண்டு அறிக்கையின்படி, மொத்தம் 14.5 மில்லியனில் 275,500 பெறுநர்களுக்கு குரு செத்த கடன் வழங்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில், வட்டி விகிதங்கள் உயர்ந்தால், அது வாடிக்கையாளர்களுக்கு அதிக சுமையாக இருக்கும்.

எனவே, குரு செத்த கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image