வெளிவிவகார அமைச்சின் மற்றுமொரு தூதரக காரியாலயம் திறப்பு

வெளிவிவகார அமைச்சின் மற்றுமொரு தூதரக காரியாலயம் திறப்பு

வெளிவிவகார அமைச்சின் குருநாகல் பிராந்திய தூதரகம் நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது.

குருநாகல் பிராந்திய தூதரகத்தின் நினைவு பலகை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டது.

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரேவினால், தூதரக அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு அலரி மாளிகையில் இருந்தவாறு இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக நேரடியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணைந்துகொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான சுமித் உடுகும்புர, மஞ்சுளா திசாநாயக்க, ஜயரத்ன ஹேரத், குருநாகல் மேயர் துஷார ரஞ்ஜீவ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image