All Stories
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
உழைக்கும் வர்க்கத்தின் இலத்திரனியல் தரவுத் தொகுதியை ஸ்தாபிப்பதற்கான உதவியை வழங்குமாறு உலக தொழிலாளர் அமையத்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் (SOEs) ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கட்டாய ஓய்வு பெறும் வரை பணி நீட்டிப்புடன், ஓய்வு பெறுவதற்கான விருப்ப வயது 55 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாவலப்பிட்டிய போஹில், பாரண்டா தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் இன்று (14) பாரண்டா தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் பொறுப்பதிகாரிகளுக்கான மகப்பேற்று விடுமுறைக்காக செலுத்தப்படும் பதிலீட்டு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் நாட்டில் இருந்து வெளியேறுகின்றமை மற்றும் வைத்தியர்கள் ஓய்வுபெற உள்ளமையால் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பேரவையின் அங்கத்தவர்களில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகருக்குக் கடிதமொன்றை கையளித்துள்ளது.
தனியார் நிறுவனமொன்று பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பான விசாரணை கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் , கல்வியமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர் தெரிவுக்காக, இணையவழி முறைமையில் மாத்திரம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.