அரச ஊழியர்களின் வினைத்திற்ன் காண் தடைதாண்டல் பரீட்சைக்கான நிவாரணங்களைக் குறிப்பிட்டு 10 முக்கிய அம்சங்களுடன் விசேட அறிவித்தழல அரசாங்க சேவை ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.
All Stories
பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
வட்டவளையில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களினால் கடந்த நாட்களாக முன்னெடுக்க வந்த பணி புறக்கணிப்பு போராட்டம் நிர்வாகம் வழங்கிய உறுதிமொழியைடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவத்துள்ளது
கடந்த வருடங்களில் வழங்கியது போன்று இவ் வருடமும் போனஸ் கொடுப்பனவை வழங்கவேண்டுமென வலியுறுத்தியே வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமக்கு வழமையை போன்று போனஸ் வழங்குவதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்து சிறிய தொகை ஒன்றை வழங்குவதாக அறித்துள்ளதாகவும் எனவே தமக்கு முழுமையான போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், எம்.பியுமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய இ.தொ.கா பிரதிநிதிகள் வட்டவளை ஆடைத்தொழிற்சாலைக்கு செவ்வாய்க்கிழமை (28) சென்று தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக தரப்பினருடன் அவர்கள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சம்பள உயர்வு அவசியம், போனஸ் வழங்கப்பட வேண்டும், தற்போது வழங்கப்படும் உணவு மாற்றப்பட வேண்டும், சில மேற்பார்வையாளர்களின் செயற்பாடுகள் மோசமாக உள்ளன என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைத்தனர்.
இதற்கு உணவு மாற்றம், மேற்பார்வையாளர் விவகாரம் உள்ளிட்ட விடயங்களுக்கு நிர்வாக தரப்பில் சாதக பதில் வழங்கப்பட்டுள்ளது. போனஸ் தொடர்பில் மேலிடத்தில் கதைத்துவிட்டு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன், பணி புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்ற நாட்களுக்கும் சம்பளம் வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் நிர்வாக தரப்பில் இருந்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு வழமையாக பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிக்கப்படுகின்றது.
வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி, பதாதைகள் காட்சிப்படுத்தப்படுவதற்கு தடை விதித்து சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேசிய சம்பள ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இன்று (29) கடமைக்கு சமுகமளிக்காத 20க்கும் மேற்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக தொழிற்சங்க ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது.
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பான அறிவித்தலை நிதி அமைச்சு வௌியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் ஏப்ரல் மாதத்தின் முதலாம் வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகம் மற்றும் சேவையை முன்னெடுக்கவிடாமல் இடையூறு விளைவித்த தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஊழியர்களுக்கும் கட்டாய விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக பெற்றோலியக்கூட்டுத்தாபன தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.