கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
All Stories
இலங்கை அதிபர் சேவை தரம் III க்கான ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளது்.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரின் மேதின ஊர்வலம் அட்டன் நகரில் நடைபெற்றது.
அட்டன் நகர மத்தியில் இருந்து பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பியதுடன் பேரணியிலும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரின் அங்கத்தவர்கள் ஈடுப்பட்டனர்.
சுமார் 1000 ற்கும் மேற்பட்ட இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள் கலந்துக் கொண்ட இந்த பேரணி அட்டன் நகர் ஊடாக மகாநாட்டு மண்டபத்தை சென்றடைந்தது.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் திங்கட்கிழமை (08) ஆரம்பமாகுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2022 டிசம்பரில் எடுக்கப்பட்ட அரசாங்க கொள்கை மற்றும் அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க, ஜூலை 2023-க்குள் மின்சாரக் கட்டணங்கள் மீளாய்வு செய்யப்பட்டு, திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை Anti-Terrorism Act (ATA) அவசரமாக முன்வைக்கப் போவதில்லை என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நாட்டின் தொழில் சட்டத்துக்குப் பதிலாக, நவீன உலகத்துக்கு ஏற்பவும், தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் புதிய தொழில் சட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
ஊவா மாகாண சபை கல்வி அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட கல்வித்துறை பட்டதாரிகள் 21 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 25.04.2023 செவ்வாய்க்கிழமை ஊவா மாகாண பிரதான செயலாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள், இடமாற்றம் மூலம் சேவையில் ஈடுபட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் (BASL) நியமிக்கப்பட்ட விசேட குழு, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தின் சில விதிகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை அவதானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.