ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
All Stories
அரசு சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டு மக்களுக்கு சுதந்திரம் உள்ளதா என்ற கேள்வியும் ஏற்பட்டுள்ளது என்று தென் மாகாண தோட்ட தொழிலாளர்களின் சங்கத்தின் மகளிர் பிரிவு உறுப்பினர் எஸ்.காந்திமதி தெரிவித்தார்.
தென் மாகாண தோட்ட தொழிலாளர் சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது, ஒரு நேர சாப்பாட்டிற்கு வழி இல்லாது இருக்கும் தோட்ட தொழிலாளர்களை பற்றியேனும் சிந்திக்காது நீங்கள் கோடி கணக்கில் செலவு செய்து சுதந்திர தினம் கொண்டாடுகின்றீர்கள்.
எமது பிரதேசத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு பாதைகள் சீரற்று காணப்படுகின்றன, ஒழுங்கான வீடுகள் இல்லை, கல்வி கற்கும் பிள்ளைகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர், தோட்டங்களில் அவசர சிகிச்சைக்கான வைத்தியசாலைகளோ வைத்திய வசதிகளோ இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் எமது நிலைப்பற்றி எவ்வித அக்கறையும் இல்லாது நீங்கள் சுதந்திர தினத்திற்கு கோடி கணக்கில் செலவிடுவது நியாயமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
தொழிலாளர்களுக்கு பத்து பேர்ச் நிலம் தருகின்றோம் தனி வீட கட்டி தரகின்றோம் என்று எத்தனையே தடவைகள் அறிவிக்கப்பட்ட போதும் எங்கு தனி வீடு கட்டி யாருக்கு கொடுத்துள்ளீர்கள் என்று யாரும் அறியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இன்று மதியம் 12.30 முதல், சேவையிலிருந்து விலகி, அரை நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலை கொழுந்தின் அளவை குறைத்து மதிப்பிடும் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக தாம் நிறுத்தல் அளத்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்து இருந்தோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரி செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
பரீட்சை நடைபெறும் காலங்களில் மின்துண்டிப்பை தவிர்க்குமாறு மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 14ம் திகதி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஊழியர்களின் வருமானத்தில் உள்ள பணம் அல்லாத நன்மைகளை, உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரியிலிருந்து விலக்களித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கைக்கு எதிராக தொழில்சார் நிபுணர்கள் உட்பட அனைத்துத் துறை ஊழியர்களும் நாளை (08) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட மஸ்கெலியா - ஸ்டோக்கம் மற்றும் கவரவில ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கேட்டறிந்ததுடன், அவை தொடர்பில் தொழில் ஆணையாளருடனும் பேச்சு நடத்தினார்.
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு 'அக்ரஹார' சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்காக 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமையவே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
தனியார் துறை ஊழியர்களுக்கு 'அக்ரஹார' சுகாதார காப்புறுதிக்கு இணையான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான பிரேரணை 2023 வரவு செலவுத் திட்ட உரையில் கௌரவ ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக, மேற்படி பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு இன்று (07) பகல் கூடவுள்ளது.