இலங்கையில் இருந்து 10,000 புலம்பெயர்ந்த பணியாளர்களை அழைப்பதற்கு மலேசிய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 26 பேர் யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மீதான பயணக்கட்டுப்பாடுகளை கனடா தளர்த்தியுள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களினால் வங்கிகள் ஊடாக அனுப்பப்படும் சட்டரீதியான பணவனுப்பல்களுக்காக வழங்கப்படும் மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட ரீதியான வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதன் மூலம் விமான நிலையத்தில் 6650 டொலர்கள் வரை சுங்கத் தீர்வை பெறுமதியை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உக்ரேனின் கார்கிவ் பிரதேசத்தில் ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவில் பணியாற்ற இலங்கையர்களை அனுப்புவதற்காக 1,125 வீசாக்கள் தயார் நிலையில் உள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்,
போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, நிதி மோசடி செய்யும் நபர்களிடம் அகப்பட வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் வரை 2,885 பேர் தென் கொரியாவுக்கு தொழில் நிமித்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட சேவைப் பதக்கம் நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை வைத்தியர் அசோக டயஸுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.