உண்டியல் முறையில் பணம் அனுப்புகிறவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
All Stories
வௌிநாடுகளில் இருந்து சட்டரீதியாக வங்கிகளுக்கு பணம் அனுப்பி நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சாரத்தினால் இயங்கும் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் இன்று (31) வௌியிடப்பட்டுள்ளது.
இரண்டு வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் உள்ள தாய்மார் வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வௌியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியுசிலாந்தில் தற்போது நிலவும் தொழில்வாய்ப்புகள், அவசியமான தகமைகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஏனைய புலம்பெயர் விபரங்கள் பெறக்கூடிய வளநிலையமொன்றை இலங்கையில் ஸ்தாபிப்பதாக இலங்கைக்கான நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Edward Appleton தெரிவித்துள்ளார்.
LankaRemit பணம் அனுப்பும் செயலியை ஊக்குவிப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் கைகோர்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான பொலிஸ் அனுமதி அறிக்கைகளை விரைவாகப் பெறுவதற்காக இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 10 கணினிகளை அன்பளிப்பாக வழங்கியது.
பாடசாலை மட்டத்தில் ஜப்பான் மொழியை பயிற்றுவது தொடர்பில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதாக கூறி ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக என இலங்கையின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள், வெளிநாட்டு ஊழியர்களை சுற்றுலா விசாவின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவதுடன் பின்னர் தொழில் வீசாவாக மாற்றிக்கொள்ளலாம் என்று முகவர்கள் தெரிவிக்கின்றனர். எனும் அவ்வாறு சுற்றுலா வீசாவை தொழில் வீசாவாக மாற்ற முடியாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறந்த 25 குடியேறியோருக்கான கனேடிய விருது 2022இனை இரு இலங்கை வம்சாவளி கனேடியர்களான பேராசிரியர் ஜானக ருவன்புர மற்றும் கலாநிதி சிவகுமார் குலசிங்கம் ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று அவசரமாக வௌிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டை வழங்குவதற்கு விசேட அலுவலகப்பிரிவினை திறக்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு மணி நேரத்திற்கு 32 பேர் என்ற வகையில் தொழில் நிமித்தம் புலம்பெயர்ந்துள்ளனர் என்று சண்டே டைம்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.