2022 ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 2,51,151 பேர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
All Stories
ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் இ.குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வௌிநாடு செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் சர்வதேச கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களில் சிலர் மீண்டும் இலங்கை திரும்ப இணக்கம் வௌியிட்டுள்ளனர்.
தாதியர் துறைக்கு இலங்கையர்கள் இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு சிங்கப்பூரில் இருந்து நிபுணர்கள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இதனூடாக சுமார் 4000 தாதியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் பணியாற்றிவரும் இலங்கை பணியாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுவதாக வௌியிடப்படும் தகவல் பொய்யானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
லெபனான் ஊடாக இலங்கையர்களை படகு மூலம் இத்தாலிக்கு அழைத்துச் செல்லும் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அனுமதிப்பத்திரம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர்களுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (23) கலந்துரையாடியுள்ளார்.
சுற்றுலா விசா மூலம் மலேசியாவுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்ல முயன்ற 9 பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி, 22 கரட்டுக்கு அதிகமான தங்கப் ஆபரணங்களை அணிந்த பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஓமானில் பெண்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர் ஈ.குஷான் என்பவரை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.