புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
All Stories
யாழ். நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகை ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களை முன்னிட்டு நாடு முழுவதும் தபால் மூலமான பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் திணைக்களம் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
அரச துறையில் பல்வேறு பிரிவுகளிலும் நிலவும் சம்பள முரண்பாடு மற்றும் சம்பள நெருக்கடி நிலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ள 485 பேரின் ஓய்வூதியம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்கள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இன்று நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பெண்களாக இருந்தாலும், தொழில் செய்யும் பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெறுவதற்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் அனைத்து அறிவித்தல்களையும் விடுத்துள்ளதாக அந்த சம்மேளனத்தின் பிரதானிகள், அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறைக்கு அமைய அரச ஊழியர்களது கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகைள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.