1700 ரூபா சம்பள வர்த்தமானி தொடர்பிலான ஆட்சேபனைகளை ஆராய்ந்து வரும் தொழில் திணைக்களம்

1700 ரூபா சம்பள வர்த்தமானி தொடர்பிலான ஆட்சேபனைகளை ஆராய்ந்து வரும் தொழில் திணைக்களம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பிலான ஆட்சேபனைகளை ஆராய்ந்து வருவதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வௌியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் நேற்று முன்தினம் (15) ஆட்சேபனைகளை தாக்கல் செய்திருந்தது.

ஆட்சேபனைகள் தொடர்பில் ஆராயப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் தொழில் அமைச்சருக்கு அறிக்கை அனுப்பி வைக்கவுள்ளதாக தொழில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அதன் பின்னர் சம்பளம் தொடர்பில் தொழில் அமைச்சர்  தீர்மானம் எடுக்கவுள்ளார். 

மூலம் - நியூஸ்பெஸ்ட்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image