எதிர்வரும் திங்கட் கிழமை முதல் (06) அனைத்து தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடாது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
நாட்டில் அமுலில் உள்ள வரிக்கட்டமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரச செலவுகள் 250பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (03) தொடக்கம் மறு அறிவித்தல் வரை தொழிற்திணைக்கள தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களை மூட தொழில் ஆணையாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.
முச்சக்கரவண்டிகளுக்கான பயணிகள் போக்குவரத்து சேவைகளை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் தலையிட்டு, முச்சக்கர வண்டி 'விலை விபர காட்சிப்படுத்தலை காண்பிக்கும் சட்டத்தை அமுல்படுத்துமாறு அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அலுவலகங்களுக்குச் சமூகமளிக்க வேண்டாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் சேவைகளில் இருந்து விலகவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி பன்மடங்கு அமெரிக்க டொலர்களாக உயர்வடையும் வரை அரச சேவையில் எத்தரப்பினருக்கும் ஓய்வூதிய கொடுப்பனவினை வழங்குவது பொருத்தமற்றதாகும்.
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுமா என்பது தொடர்பாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெளிவுபடுத்தினார்.
கனிஷ்ட அரச உத்தியோகத்தர்கள் முதல் அதற்கு கீழே பணிபுரிகின்ற அரச உத்தியோகத்தர்கள் வரை அனைவரும் தங்கள் கடமைக்கு சமூகமளிப்பதற்கான போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
2022 முதல் காலாண்டில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதால் 73 மில்லியன் டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளது என தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்கத்தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.