அடையாள அட்டை கோரும் தனியார் பஸ் ஊழியர்கள்

அடையாள அட்டை கோரும் தனியார் பஸ் ஊழியர்கள்

தனியார் பஸ் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக அடையாள அட்டை பெற்றுத் தரப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் தொழிற்சங்கவியலாளர்களின் பொது மக்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. 

தற்போது காணப்படுகின்ற பிரச்சினைக்கு மத்தியில் தங்களது சேவைகளை அடையாளப்படுத்தி கொள்வதற்கு தனியார் பஸ் சேவையாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் குமார ரத்ன தெரிவித்தார்.

தனியார் பேருந்து சேவையாளர்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கப்பெறுவதில்லை.

எனவே, தனியார் பஸ் சேவையாளர்கள் மற்றுமொரு பஸ்ஸில் செல்லும் போது அவர்களுக்கு கட்டணத்தை அறவிடாதிருப்பதற்காக அடையாள அட்டை விநியோகிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் தொழிற்சங்கவியலாளர்களின் பொது மக்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

சூரியன் செய்திகள்

இடமாற்ற ஒழுங்கு விதிகள் - விண்ணப்பம் கல்வி அமைச்சால் வௌியீடு

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லை பிரச்சினைக்கு என்ன நடக்கிறது?

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image