இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் 655 பேர் நாடு திரும்பினர்

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் 655 பேர் நாடு திரும்பினர்

மத்திய கிழக்கு, மாலைதீவு ஆகிய நாடுகளில் சிக்கித் தவித்த 655 இலங்கையர்கள் நேற்றுமுன்தினம் (08) அதிகாலை இலங்கையை வந்தடைந்தனர்.

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக அநாதரவாகியிருந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் இருந்து 293 பேரும் கட்டாரில் இருந்து 111 பேரும் ஐக்கிய அரபு இராச்சியில் இருந்து 191 பேரும் மாலைதீவில் இருந்து 60 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தத அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image