விமானசேவை இடைநிறுத்தம்- ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

விமானசேவை இடைநிறுத்தம்- ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

கொழும்புக்கும் மொஸ்கோவுக்கும் இடையிலான விமானசேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இன்று (28) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரேன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் போர் ஆரம்பித்துள்ள நிலையில் சமாதானத்திற்கான பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும் இதுவரை ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்படவில்லை. இன்றும் இருநாடுகளுக்கிடையலான பேச்சுக்கள் துருக்கியில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை தனது விமானசேவையை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image