வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் 8.95 மில்லியன் ரூபா இழப்பீடு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் 8.95 மில்லியன் ரூபா இழப்பீடு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவுக்கு கடந்த ஆண்டு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய முறைப்பாட்டாளர்களுக்கு, 8.95 மில்லியன் ரூபா இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.


அனுமதிபெற்ற 451 வெளிநாட்டு வேலைவாய்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன், 92 நபர்களுக்கு எதிராகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 1,090 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டும் சமரசம் செய்யப்பட்டும் உள்ளன.
 
ருமேனிய எல்லையைக் கடக்க முற்பட்ட 25 இலங்கையர்கள் கைது!

அத்துடன் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக 64 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image