இலங்கையர் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர் கைது!

இலங்கையர் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர் கைது!

பாகிஸ்தானில் இலங்கையில் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பில்லி எனப்படும் இம்தியாஸ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

ராவல் பிண்டி செல்லும் பேரூந்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அந்நபரே இலங்கையரான பிரியந்தவை சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட பின்னர் அவருடைய சடலத்தை அவமானப்படுத்தியவர் என்று அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இந்நபர் கடந்த திங்கட் கிழமை கைது செய்யப்பட்டதுடன் அவருடன் சேர்த்து 7 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கைது செய்யப்பட்டவர்களில் தொழிற்சாலை முகாமையாளரான பிரியந்த குமாரவை கொலை செய்ய சதித் திட்டம் மேற்கொண்டவர் என்றும் வன்முறை தூண்டுதலில் ஈடுபட்டவர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர் என்றும் வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Arrest2

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image