பிரியந்தவின் குடும்பத்துக்கு 2.5 மில் ரூபா நிதி

பிரியந்தவின் குடும்பத்துக்கு 2.5 மில் ரூபா நிதி

பாகிஸ்தானின், சியால்கோட்டில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்தபோது படுகொலை கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊழியர் நலன்புரி நிதியிலிருந்து இந்தத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர் என்றவகையில் கடந்த 11 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு பிரியந்த வழங்கிய பங்களிப்பை கவனத்திற்கொண்டு இந்நிதியை வழங்குவதற்கு அனுமதி கோரி தொழில் அமைச்சர் முன்வைத்த அமைச்சரவை முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image