நாடுதிரும்பும் இலங்கையர்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலின்றி வீடு செல்லலாம்

நாடுதிரும்பும் இலங்கையர்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலின்றி வீடு செல்லலாம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளவில் அமைக்கப்பட்டுள்ள விசேட பிசிஆர் பரிசோதனை மத்திய நிலையம் காதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் நேற்று (23) திறக்கப்பட்டுள்ளது.

 
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் இங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
 
பிசிஆர் பரிசோதனை அறிக்கை, இங்கு 3 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்படும். வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பும் இலங்கையர்கள் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக வீடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image