சுற்றுலாப்பிரயாணிகளுக்காக இன்று திறக்கப்படும் விமானநிலையம்

சுற்றுலாப்பிரயாணிகளுக்காக இன்று திறக்கப்படும் விமானநிலையம்

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் இன்று (26) திறக்கப்படவுள்ளதுடன் வௌிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சுற்றுலாப்பிரயாணிகளாக ரஷ்ய பிரஜைகள் 300 பேர் இலங்கைக்கு இன்று (26) வரவிருந்த நிலையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் விமானசேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்கு உக்ரைன் சுற்றுலாப்பிரயாணிகள் எதிர்வரும் 28, 29ம் திகதிகளில் இரு விமானசேவைகளில் நாட்டுக்கு வரவுள்ளனர் என்று விமானசேவைகள் நிறுவனத்தின் தலைவர் ரஜீவ் சூரிய ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image