மற்றொரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

மற்றொரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

வௌிநாடுகளில் இருந்து 526 இலங்யைர்கள் இன்று (27) காலை நாடு திரும்பியுள்ளனர்.

கொவிட் தொற்று காரணமாக தாய்நாட்டுக்கு வர விரும்பிய இலங்கையர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையினூடாக இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்னளர்.

அதற்கமைய, மாலைதீவில் இருந்து ஒருவரும், கட்டாரில் இருந்து 130 பேரும் அவுஸ்திரேலியாவில் இருந்து 68 பேரும் ஜப்பானில் இருந்து 74 பேரும் ஐக்கிய அமீரகத்தில் இருந்த53 பேரும் ஜோர்தானில் இருந்த 200 பேரும் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, மேலும் 75 பேர் டுபாய், இத்தாலி, துருக்கி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரவுள்ளனர் என்று கொரோனா ஒழிப்பிற்கான தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு திரும்பும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image