இலங்கையர்களை மீள அழைக்கும் நடைமுறையில் மீண்டும் நிபந்தனை

இலங்கையர்களை மீள அழைக்கும் நடைமுறையில் மீண்டும் நிபந்தனை

கொரோனா வைரஸின் புதிய அழுத்தங்களையடுத்து, நிபந்தனையுடனான மீளழைத்துவரும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சில நாடுகளில் கொரோனா வைரஸின் மிகவும் வேகமான பரவல் கண்டறியப்பட்டதனையடுத்து, இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து பயணிகளும் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து முன் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான தற்போதைய நடைமுறையைத் தொடர்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிலைமை மீள்மதிப்பீடு செய்யப்பட்டவுடன், மீளழைத்து வரும் செயற்பாடுகள் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image