சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 100 இலங்கையர்கள் நாட்டுக்கு

சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 100 இலங்கையர்கள் நாட்டுக்கு

சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக சென்று நாடு திரும்ப முடியாதிருந்த 100 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று (14) நாடு திரும்பினர்.

அரசின் விசேட அனுமதியுடன் பண்டாரநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்தனர்.

அதற்கமைய, சிங்கப்பூரில் இருந்து 8 பேரும் சவுதி அரேபியாவில் இருந்து 50 பேரும் கட்டார், தோஹாவில் இருந்து 42 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதுடன் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image