இன்றும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இன்றும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்

 கனடா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து ஒரு தொகுதி இலங்கையர் நேற்று (15) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் என்று தேசிய கொவிட் தடுப்பு மத்திய நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

கனடாவில் இருந்து 130 பேரும் கட்டாரில் இருந்து 80 பேரும் நாட்டுக்கு வந்தடைந்தனர்.

விமானநிலையத்தை வந்தடைந்தவுடன் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜெர்மனியில் இருந்து 30 பேரும் பிரித்தானியாவில் இருந்து 48 பேரும் துருக்கியில் இருந்து 74 பேரும் நேபாளத்தில் இருந்து 23 பேரும் நாட்டை வந்தடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image