O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் புதிய அறிவித்தல்

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் புதிய அறிவித்தல்

ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மேலும் தாமதமாகக்கூடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனை குறப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஜனவரி மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு பிரதான பரீட்சைகளுக்கும் இடையே 3 மாதகால இடைவெளி அவசியம்.

இதன்காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மேலும் தாமதமாகக்கூடும்.

எனினும், பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டப்படி, கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image