C190 ஐ இலங்கையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை

C190 ஐ இலங்கையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி ஜெனீவாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள C190 தொழில் உரிமை சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா மெல்பேர்னில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச தொழிற்சங்க அமைப்பினுடைய ஐந்தாவது மாநாட்டில் இலங்கை சார்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

ஜெனீவாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள C190 தொழில் உரிமை சட்டத்தை இலங்கையில் சட்டபூர்வமாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தாம் நீதி அமைச்சரிடமும் தொழில் அமைச்சரிடமும் ஏற்கனவே கோரியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்..

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image