அறவழிப் போராட்டத்தின் மீதான தாக்குதலையடுத்து எதிர்த்து 48 மணிநேர அடையாளவேலை நிறுத்தம்

அறவழிப் போராட்டத்தின் மீதான தாக்குதலையடுத்து எதிர்த்து 48 மணிநேர அடையாளவேலை நிறுத்தம்

அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறையை கண்டித்து 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்ட தீர்மானத்தின்படி 12 மற்றும் 13 மே 2022 ஆகிய இரு தினங்களும் 48 மணிநேர அடையாளவேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது. என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் அடையாள வேலைநிறுத்த்தினை பல்கலைக்கழத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் த. சிவரூபன் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து கல்விசாராப் பணியாளர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image