பணிப்பகிஷ்கரிப்புத் தொடரும்- முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம்!

பணிப்பகிஷ்கரிப்புத் தொடரும்- முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம்!

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்பகிஷ்கரிப்பை நிறுத்துவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தபோதிலும் தாம் தொடரவுள்ளதாக முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

அச்சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நாளை காலை 7 மணி அளவில் தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணியளவில் அமுலுக்கு வருகின்ற நிலையில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு செல்லவும், பாடசாலையிலிருந்து அவர் தம் வீடுகளுக்கு வந்து சேரவும் இக்காலப்பகுதி போதாமல் இருக்கின்றமை நடைமுறை பிரச்சினையாக இருக்கின்றது. எனவே நாளைய தினம் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்வது அவசியமில்லை.

வேலை நிறுத்த போராட்டத்தின் தொடர்ச்சி பற்றி நாளை ஏனைய ஆசிரியர் சங்கங்களுடன் மீண்டும் கலந்துரையாடி அறிவிக்கப்படும் என்றும் அச்சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image