தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா 3250 வேதனம் - தொழில் அமைச்சுக்கு கடிதம் கையளிப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா 3250 வேதனம் - தொழில் அமைச்சுக்கு கடிதம் கையளிப்பு

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 3ஆயிரத்து 250 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தொழில் அமைச்சில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று இந்த கோரிக்கை கடிதத்தினை கையளித்தனர்.

 வேதன நிர்ணய சபையின் செயலாளர் வசந்த குணவர்தன தொழில் அமைச்சின் செயலாளர் R.P.A. விமலவீர, தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோர் இந்தக் கோரிக்கை கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

 அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியினால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாளாந்த வேதனத்தை 3ஆயிரத்து 250 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Wages2

Wages3

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image