அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட போக்குவரத்துக் கொடுப்பனவு

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட போக்குவரத்துக் கொடுப்பனவு

ஐந்து நாட்களும் கடமைக்கு சமூகமளிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட போக்குவரத்துக் கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு அரச நிர்வாக அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கான அதிக செலவு தொடர்பில் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு வெளியிடப்பட்டதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.

இதற்கு மேலதிகமாக அரச உத்தியோகத்தர்கள் வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கும் நிவாரணம் வழங்க தலையீடு செய்வதாக செயலாளர் உறுதியளித்ததாக ஒன்றிய செயலாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.

வாரத்தின் ஐந்து நாட்களும் பணிக்கு சமூகமளிப்பதில் போக்குவரத்துச் செலவுகளாக பெருமளவு பணம் செலவழிக்கப்படுவதாகவும் இவ்விடயம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு நல்ல பதில் தமக்கு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image