பெருந்தோட்ட தொழிலாளர்களை மலையக உழைக்கும் சமூகம் என அழைப்பதே சிறப்பானது - சஜித் பிரேமதாச

பெருந்தோட்ட தொழிலாளர்களை மலையக உழைக்கும் சமூகம் என அழைப்பதே சிறப்பானது - சஜித் பிரேமதாச

நாட்டிற்கு அன்னிய செலாவணியை பெற்றுத் தருவதில் மலையக உழைக்கும் சமூகம் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் எனினும் அவர்கள் வசதிகள் குறைந்த நிலையில் இன்னமும் உள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரமேதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று (19) பாராளுமன்றத்தில் விசேட உறையொன்றை ஆற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், மலையக பகுதிகளில் முறையான பாதை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு அதிக சிரத்தையை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் குறைந்தளவு சுகாதார வசதிகளுடன் வாழும் இவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் வறுமை நிலையில் இருந்து மீண்டு வரவும் அரசாங்கம் விசேட் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். மலையக உழகை;கும் சமூகத்தை பெருந்தோட்ட தொழிலாளர்கள் என அழைப்பதை விடுத்து மலையக உழைக்கும் சமூகம் என அழைப்பதே சிறப்பானதாக அமையும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image