அடுத்துவரும் பாடசாலை தவணைகள் குறித்து கல்வி அமைச்சின் அறிவித்தல்

அடுத்துவரும் பாடசாலை தவணைகள் குறித்து கல்வி அமைச்சின் அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை (24) முதல் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் ஓகஸ்ட்  18 முதல் 27 வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஓகஸ்ட்  28ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி வரையில் இடம்பெறும்.

மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறும்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் டிசம்பர் இறுதி வரை வரையில் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image