EPF, ETF நிதிகளில் கை வைக்காதே - தொழிற்சங்கங்கள்!

EPF, ETF நிதிகளில் கை வைக்காதே - தொழிற்சங்கங்கள்!

தொழிலாளர்களுக்கான சமுக பாதுகாப்பு நிதியமான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பது உட்பட சில கோரிகையை முன்வைத்து துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு மனுவொன்றுக்கு நேற்று (19) கையெழுத்திட்டது.

துறைமுகத் திணைக்களத்தில் பணியாற்றும் பல ஊழியர்கள் இவ்வெதிப்பு மனுவில் கையெழுத்திட்டனர்.

இதேவேளை, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் சேமலாப நிதியம் என்பவற்றை கடன் சீரமைப்புக்கு பயன்படுத்துவது மற்றும் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு எதிராக கடுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நேற்று (19) முன்னெடுத்தனர்.

கட்டுநாயக்க, எவரியவத்த நகரில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில், அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கம், வர்த்தக வலய ஊழியர்களின் தேசிய மத்திய நிலையம், வியர்வைத் துளிகளின் கூட்டமைப்பு, மகளிர் மத்திய நிலையம் மற்றும் சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர்கள் சங்கம் ஆகியன இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image