சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு

சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக எதிர்வரும் மே 15 ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போது குறித்த பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8 ஆம் வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image