குளவி கொட்டுக்கு இலக்காகி 12 தொழிலாளர் பாதிப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 தொழிலாளர் பாதிப்பு

பசறை - கோணக்கலை கீழ் பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 12  பேர் பசறை வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று சனிக்கிழமை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை முற்பகல் வேலையில் குளவிகள் சூழ்ந்து தாக்கியுள்ளன. இந்த குளவி தாக்குதலில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு விரைந்த இளைஞர் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குளவி தாக்குதலுக்கு உட்பட்ட 12  பேரும் உடனடியாக பசறை வைத்தியசாலையில் சிக்ச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் ஏழு பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பிய நிலையில் ஐந்து பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image