கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது

கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது

குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கணினிக்கட்டமைப்பு வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளது.

இன்று (09) காலை முதல் கடவுச்சீட்டு வழமைப் போன்று விநியோகிக்கப்படுவதாக குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் பிரதி குடிவரவு கட்டுப்பாட்டாளர் திருமதி பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று (08) வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கீடு செய்த விண்ணப்பதாரர்களுக்கு இன்று (09) கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என்று ஊடக பேச்சாளர் பிரதி குடிவரவு கட்டுப்பாட்டாளர் திருமதி பியூமி பண்டார மேலும் தெரிவித்தார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image