ஆசிரியர்களுக்கான தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து

ஆசிரியர்களுக்கான தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து

போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இணைப்புக்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க பின் கையொப்பத்துடன் நேற்று முன்தினம் (30) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ED/10/27/14/1-2 மற்றும் 2022.06.16ஆம் திகதிய கடிதத்தின் மூலம் இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்ட அனைத்து தற்காலிக இடமாற்றங்களும் இரத்து செய்யப்பட்டு ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் முடிவுறுத்தி மீண்டும் தனது நிரந்தர பாடசாலைக்கு செல்ல வேண்டும் என ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள், மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் மற்றும் பாடசாலைகளில் சேவை தேவை காரணமாக வழங்கப்பட்ட தற்காலிக இணைப்பு அல்லது இடமாற்றங்கள் தொடர்ந்து இருக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image