ஆசிரியர் சேவை இணைப்பு பிரச்சினைக்கு தீர்வு

ஆசிரியர் சேவை இணைப்பு பிரச்சினைக்கு தீர்வு

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியத்துக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் முக்கியமான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 
இதுகுறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளதாவது,
 
இன்று (09/01/2022) கல்வி அமைச்சருடன் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் நடத்திய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
 
1. போக்குவரத்து சிரமம் காரணமாக, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை இணைப்புகள் 31/08/2022 அன்று முடிவடையும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார், மேலும் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டணியின் கோரிக்கையின்படி, இறுதி திகதி இணைப்பு 31/12/2022 என மீண்டும் பழையபடி நீடிக்கப்பட்டது.
 
2. தேசிய பாடசாலை இடமாற்ற சபைகளை முறைப்படுத்துவதன் மூலம் ஆசிரியர் இடமாற்றங்களை விரைவுபடுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.
 
3. ஆசிரியர் சேவை யாப்பின்படி மட்டுமே ஆட்சேர்ப்பு நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
 
4. பாடசாலைகள் வழமை போன்று ஐந்து நாட்களும் இயங்கினாலும், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், ஆசிரியர்கள் வழமையை விட அதிகமான பயணச் செலவுகளை மேற்கொள்ள நேரிடும் என இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறான பல விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர் அதிபர்கள் சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று கல்வி அமைச்சில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image